ADDED : ஜூன் 10, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, ஊத்தங்கரை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்டத்தில், ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று நடந்தது. ஊத்தங்கரை ஒன்றியத்திலுள்ள, 129 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்டத்தில், 4வது கல்வி ஆண்டுக்கான முதற்கட்ட பயிற்சி, 125 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில், 1ம் வகுப்பு முதல், 5 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடந்தது.
இப்பயிற்சி மேற்பார்வையாளர் ஆசிரியர் வசந்தி, விரிவுரையாளர் முனைவர் நிஷா ஆகியோர் பயிற்சியளித்தனர். பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பயிற்சியில் அனைத்து ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.