/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகளை அதிகாரி ஆய்வு
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகளை அதிகாரி ஆய்வு
புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகளை அதிகாரி ஆய்வு
புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகளை அதிகாரி ஆய்வு
ADDED : டிச 22, 2024 01:27 AM
புதிய பாரத எழுத்தறிவு திட்டசெயல்பாடுகளை அதிகாரி ஆய்வு
பென்னாகரம், டிச. 22-
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் ஒன்றியம் சுஞ்சல்நத்தம் மற்றும் அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளான ஈச்சப்பாடி, சிகரல அள்ளி ஆகிய இடங்களில் நேற்று புதிய பாரத எழுத்தறிவு திட்ட சார்பில், புதிய கற்போருக்கான கணக்கெடுப்புகள் குறித்த ஆய்வை, வயது வந்தோர் கல்வி இயக்க இணை இயக்குனர் பொன்குமார் பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினார். அப்போது தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மோகனப்பிரியா வட்டார கல்வி அலுவலர் முருகன் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மகேஷ் ஆசிரியர் பயிற்றுனர்கள் குணசேகரன், சக்திவேல், மலர்விழி மற்றும் தலைமையாசிரியர்கள் ராஜா, கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.