sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நெல் வயலில் அதிகாரிகள் ஆய்வு

/

நெல் வயலில் அதிகாரிகள் ஆய்வு

நெல் வயலில் அதிகாரிகள் ஆய்வு

நெல் வயலில் அதிகாரிகள் ஆய்வு


ADDED : டிச 08, 2024 01:34 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல் வயலில் அதிகாரிகள் ஆய்வு

அரூர், டிச. 8-

'காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, தரமற்ற நெல் விதையால், 35 நாட்களில் பூட்டு வந்த வயல்களில் அதிகாரி

கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையிலுள்ள தனியார் உரக்கடையில், பெரிய பண்ணைமடுவை சேர்ந்த விவசாயிகள் பலர், கோதாவரி என்ற ஆந்திரா ரக நெல் விதைகள் வாங்கி, 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்துள்ளனர். நடவு செய்த, 35 நாட்களில் நெற்பயிரில் பூட்டு வந்துள்ளது. அதில், நெல்மணிகள் எதுவும் வராது. பதராக போய்விடும். ஏக்கருக்கு விதை நெல், நடவுப்பணி என, இதுவரை, 35,000 ரூபாய் செலவு செய்துள்ளோம். தரமற்ற விதை நெல்லால் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதுடன், தரமற்ற விதை நெல் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்த செய்தி,

'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று வெளியானது. இதையடுத்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் மணி, விதை ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்டோர் நேற்று, பெரிய பண்ணைமடுவில் பாதிக்கப்பட்ட நெல் வயலில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, தீர்த்தமலையில் நெல் விதை விற்பனை செய்யப்பட்ட தனியார் உரக்கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். விவசாயிகள் தனியார் உரக்கடைகளில் விதை வாங்கும்போது, அதற்கான ரசீதை கேட்டு பெற, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us