/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்
/
புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்
ADDED : நவ 07, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகையிலை பொருள் விற்ற
2 கடைகளுக்கு அபராதம்
கம்பைநல்லுார், நவ. 7-
புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி மற்றும் போலீசார் கம்பைநல்லுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அக்ரஹாரத்தில் ஒரு பெட்டி கடை மற்றும் கம்பைநல்லுார் - இருமத்துார் ஜங்ஷன் பகுதியில் ஒரு பீடா கடையில் இருந்த, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அக்கடைகளுக்கு தலா, 25,000 ரூபாய் அபராதம் மற்றும், 15 நாட்கள் கடை இயங்க தடை விதிக்கப்பட்டது.