/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்
/
புகையிலை பொருள் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்
ADDED : நவ 14, 2024 07:01 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதி-களில், உணவு பாதுகாப்புத் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, சோதனை மேற்கொண்டனர்.
அதன்படி ஆர்.கோபிநாதம்பட்-டியில் ஒரு பெட்டி கடை மற்றும் மூக்கனுார்பட்டியில் ஒரு மளிகை கடை என, 2 கடைகளில் புகையிலை பொருட்கள் பறி-முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, மேல்நடவடிக்கைக்கு, மொரப்பூர் இன்ஸ்பெக்டர்
கிருஷ்ணலீலா உணவு பாதுகாப்புத்து-றையினருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நிய-மன அலுவலர் பானுசுஜாதா உத்தரவுப்படி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த-கோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு
பாதுகாப்பு அலுவலர் திருப்-பதி மற்றும் போலீசார் அக்கடைகளுக்கு நேற்று நேரில் சென்று, தலா, 25,000 ரூபாய் அபராத தொகைக்கான நோட்டீஸ் வழங்கிய-துடன், 15 நாட்கள் கடை திறக்கக்கூடாது என எச்சரித்தனர்.