ADDED : ஜன 17, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
அரூர், : அரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, அம்பேத்கர் நகருக்கு செல்லும் சிமென்ட் சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வர தயங்குகின்றன. எனவே, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.