/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எச்.தொட்டம்பட்டி சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
எச்.தொட்டம்பட்டி சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : டிச 16, 2024 02:35 AM
அரூர்: அரூரில், சேலம் பைபாஸ் சாலையில், அரசு மகளிர் மேல்நிலைப்-பள்ளியில் இருந்து, பச்சினாம்பட்டி வழியாக, எச்.தொட்டம்-பட்டி கிராமத்திற்கு செல்லும், 3 கி.மீ., தார்ச்சாலை, கடந்த, 4 ஆண்டுகளாக சேதமாகி, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழி-யுமாக உள்ளது.
இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்ப-டுகின்றனர். மேலும், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். விளைபொருட்களை டூவீலரில் கொண்டு செல்ல முடியாமல், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்க கோரி, பலமுறை கோரிக்கை விடுத்தும், நட-வடிக்கை எடுக்கவில்லை. எனவே, சேதமடைந்துள்ள இச்சா-லையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

