ADDED : பிப் 14, 2026 06:58 AM

பாப்பிரெட்டிப்பட்டி:பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், சாலை வசதி கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்-சியில், வினோபாஜி தெரு, தர்மபுரி ரோடு, பண்-டாரசெட்டிப்பட்டி, மஜித் தெரு உள்ளிட்ட 15 வார்-டுகளில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்-றனர்.இதில், 15 வார்டான மஜித் தெருவில் அடிப்-படை வசதிகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வந்-தனர். இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம், 24.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்க முடிவு செய்து அதற்கான டெண்டர் விடப்பட்டது. இருந்-தாலும் பல நாட்களாக சாலை அமைக்கப்படா-ததால், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வந்-தனர். மேலும் வாரம் ஒரு முறை வரும் ஒகேனக்கல் குடிநீரை சீராக வழங்க கோரியும், உடனடியாக அப் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்த வலியு-றுத்தியும் நேற்று காலை, பேரூராட்சி அலுவல-கத்தில் மனு அளித்தனர். தொடர்ந்து அலுவலகம் முன், தர்மபுரி-- பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சாலை அமைக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

