sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பூசாரிகள் பேரமைப்பினர் கோரிக்கை மனு

/

பூசாரிகள் பேரமைப்பினர் கோரிக்கை மனு

பூசாரிகள் பேரமைப்பினர் கோரிக்கை மனு

பூசாரிகள் பேரமைப்பினர் கோரிக்கை மனு


ADDED : பிப் 13, 2024 11:18 AM

Google News

ADDED : பிப் 13, 2024 11:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி, கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட பூசாரிகள் பேரமைப்பினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும், 60,000 பூசாரிகளை உறுப்பினராக கொண்டு, பூசாரிகள் பேரமைப்பு செயல்பட்டு வருகிறது. வாழ்நாள் முழுவதும் கோவில்களில் திருப்பணியில் ஈடுபட்டு வரும் பூசாரிகளுக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாத ஊதியமாக, 10,000 ரூபாய் வழங்க வேண்டும். மேலும், 20 ஆண்டுகள் பூஜை செய்து, 60 வயது நிரம்பியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பூசாரிகளுக்கு ஓய்வூதியம், நலவாரிய அட்டை பெற வருவாய் சான்று கோருவதில் விலக்களிக்க வேண்டும். பூசாரிகள் நல வாரியத்தில், புதிய நலவாரிய உறுப்பினர்களை சேர்க்க, எளிய முறையில் செயல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஹிந்து சமய அறநியைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களுக்கு, பூஜை பொருட்கள் மற்றும் தீப எண்ணெய் வழங்க வேண்டும். கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us