ADDED : நவ 17, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில், அரூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி மற்றும் போலீசார் பெண்க-ளிடம் போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு பற்றியும், பெண்களுக்கான உதவி எண் -181, குழந்தைகளுக்கான உதவி எண்- 1098, மற்றும் காவலர் உதவி செயலி குறித்து விளக்கினர்.

