/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வனத்தில் மூதாட்டியின் உடலை தேடும் பணியில் போலீஸ் தீவிரம்
/
வனத்தில் மூதாட்டியின் உடலை தேடும் பணியில் போலீஸ் தீவிரம்
வனத்தில் மூதாட்டியின் உடலை தேடும் பணியில் போலீஸ் தீவிரம்
வனத்தில் மூதாட்டியின் உடலை தேடும் பணியில் போலீஸ் தீவிரம்
ADDED : செப் 23, 2025 01:46 AM
அரூர், அரூர் அடுத்த சிட்லிங்கை சேர்ந்தவர் விஜயகுமார், 42, கூலித்தொழிலாளி. இவருக்கு, 10,000 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்த உறவினர், சேலம் மாவட்டம், ஏற்காடு அடுத்த காக்கம்பாடியை சேர்ந்த வெள்ளச்சி, 63. இவர் கடந்த, 5ல் பணம் விஜயகுமார் வீட்டிற்கு வந்தவர் வீடு திரும்பவில்லை.
அவரது பேத்தி தேவி, 24, புகார் படி, கோட்டப்பட்டி போலீசார் தேடி வந்தனர். கடந்த, 15ல் வெள்ளச்சியை வெட்டி கொன்று விட்டதாக கூறி, வேலுார் மாவட்டம், பாகாயம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த விஜயகுமாரை, கோட்டப்பட்டி போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில் கடந்த, 5ல், வீட்டிற்கு வந்த வெள்ளச்சியிடம், வெறு ஒருவரிடம் பணம் பெற்று தருவதாக கூறி, வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொடுவாளால் வெட்டி கொன்று, உடலை அங்கேயே விட்டு வந்ததாக கூறியுள்ளார். போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என பயந்து, பாகாயம் போலீசில் சரணடைந்துள்ளார்.
வெள்ளச்சியின் உடலை மீட்க கடந்த, 16ல் வனப்பகுதிக்கு விஜயகுமாரை, கோட்டப்பட்டி போலீசார் அழைத்துச்சென்று உடலை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சிறையிலிருந்த விஜயகுமாரை போலீசார் நேற்று அழைத்து வந்து, மீண்டும் சிட்லிங் வனப்பகுதியில் மூதாட்டியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்