/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலை அமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்
/
சாலை அமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்
சாலை அமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்
சாலை அமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்
ADDED : ஏப் 27, 2025 04:27 AM
தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி நகராட்சி சேர்மனாக உள்ளார்.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், போதிய அடிப்படை வச-திகள் ஏற்படுத்தி தர, நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கவுன்சி-லர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், 9வது வார்டு மசூதி தெரு பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்-தினர் வசிக்கின்றனர். இங்கு, தி.மு.க.,வை சேர்ந்த மாதேஸ்வரன் கவுன்சிலராக உள்ளார். அப்பகுதி மக்களுக்கு தேவையான சாலை, கழிவுநீர் கால்வாய், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. இது குறித்து, வார்டு உறுப்பினர், நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை முறை-யிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரம-டைந்த அப்பகுதி மக்கள், வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி நிர்-வாகத்தை கண்டித்து, 30க்கும் மேற்பட்டோர் நேற்று, தர்மபுரி - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில், புரோக்கர் ஆபீஸ் அருகே மறி-யலில் ஈடுபட்டனர்.அவர்களிடம், தர்மபுரி டவுன் போலீசார் மற்றும் நகராட்சி அலு-வலர்கள் கோரிக்கைகள் குறித்து, உடனடி நடவடிக்கை எடுப்ப-தாக உறுதி அளித்ததால், மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

