ADDED : ஜூன் 12, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பைநல்லுார், காரிமங்கலம் தாலுகா பன்னிகுளத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் சதீஸ் தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப்பட்டா, இயற்கை மரணம் உதவி தொகை, திருமண உதவி தொகை, ரேஷன் கார்டு உள்பட, 118 பயனாளிகளுக்கு, 29.52 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில், அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் மற்றும் வருவாய்த்துறை, மீன்வளம், வேளாண் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.