ADDED : ஜூன் 29, 2026 06:17 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி; பொம்மிடி அருகே முத்தம்பட்டி தண்டா பகு-தியில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிய-ளவில் பலத்த மழை பெய்தது. அப்போது அடர்ந்த வனப்பகுதியில் இருந்து, 10 அடி நீள மலைப்பாம்பு பொம்மிடி - தொப்பூர் தார்சாலையை கடந்து அப்-பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் ஊர்ந்து சென்றது.
அப்போது அவ்வழியாக வந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் சென்ற மலைப்பாம்பை பார்த்து பயந்து நின்றனர். பின் சாலையை கடந்து சென்ற பிறகு, அவ்வழியே வாகனங்கள் சென்றன.
