sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புட்டிரெட்டிப்பட்டியில் பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் இன்று மூடல்

/

புட்டிரெட்டிப்பட்டியில் பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் இன்று மூடல்

புட்டிரெட்டிப்பட்டியில் பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் இன்று மூடல்

புட்டிரெட்டிப்பட்டியில் பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் இன்று மூடல்


ADDED : நவ 02, 2024 04:19 AM

Google News

ADDED : நவ 02, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் சீரமைப்பு பணிக்காக இன்று மூடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், மாற்று சாலையை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர்-அரூர் செல்லும் வழியில் உள்ள புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட்டில், இரு ரயில் பாதைகளுக்கும் இடையே கான்கிரீட் தரைத்தளம் சீராக இல்லாமல் மேடும், பள்ளமுமாக இருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.நேற்று இதை, சேலம் ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் சஞ்சீவி, பகுதி உதவி பொறியாளர் ஜவஹர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின் ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்காக, ரயில்வே கேட் இன்று காலை, 11:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து எச்சரிக்கை பலகை ரயில்வே கேட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக வரும் வாகனங்கள், பொதுமக்கள்

மாற்று பாதையில் செல்லுமாறு ரயில்வே ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us