ADDED : ஜூலை 13, 2024 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: உலக மக்கள் தினத்தையொட்டி, தர்மபுரி கலெக்டர் அலுவல-கத்தில் இருந்து, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை, டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் துவக்கி வைத்தார். தனியார் பாரா மெடிக்கல் நர்சிங் கல்லுாரி மாணவியர் பங்கேற்றனர். செந்தில் நகர் வழியாக சென்ற பேரணி, பாரதிபுரத்தில் முடிவ-டைந்தது. பின், கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அரசு மருத்துவக்கல்-லுாரி முதல்வர் அமுதவல்லி, கலெக்டரின் வளர்ச்சி பிரிவு நேர்-முக உதவியாளர் வேடியப்பன், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் பாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.