/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ
/
சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ
ADDED : ஆக 21, 2024 06:24 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், கடத்துாரை சேர்ந்த, 19 வயது பெண், பிளஸ் 2 படித்து விட்டு கடந்த ஒன்றரை ஆண்டாக வீட்டில் இருந்து வந்தார். அவர் பிளஸ் 2 படிக்கும்போது, முத்தானுாரை சேர்ந்த சரத்குமார், 29, என்பவர் பெண் பார்க்க வந்துள்ளார். அப்போது, திருமண வயது ஆகவில்லை என்று கூறியதால், இருவரும் அடிக்-கடி மொபைல்போனில் பேசி வந்துள்ளனர். கடந்தாண்டு, ஆக., 20ல் திருமணம் செய்து கொள்வதாக கூறி, சரத்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கர்ப்பமடைந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது சரத்-குமார் மறுத்துள்ளார்.
இந்நிலையில், தான் கர்ப்பமானதை மறைத்து, கடந்த ஜூலை, 10ல் அருண்குமார் என்பவருடன் சிறுமிக்கு திருமணம் நடந்துள்-ளது. ஒரு மாதமாக பெங்களூருவில் அருண்குமாருடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த, 17ல் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அதிர்ச்சியடைந்த அருண்குமார், சிறுமியையும், குழந்தையையும் அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டார். இதைய-டுத்து, சிறுமி புகார் படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் சரத்-குமார் மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

