/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரேஷன் அரிசி கடத்தல் 3 பேருக்கு 'குண்டாஸ்'
/
ரேஷன் அரிசி கடத்தல் 3 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : பிப் 11, 2025 07:20 AM
தர்மபுரி: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர், கடந்த ஜன., 18 அன்று தர்மபுரி அருகே, சேலம்- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்-போது, அவ்வழியாக வந்த ஈச்சர் வாகனத்தில், 14,300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிந்தது.
விசாரணையில், ஓசூர் சையது மவுலா, 44, கிருஷ்ணகிரி மணி-வண்ணன், 38, மதுரை, முத்து, 45, ஆகியோர்
ரேஷன் அரிசி கடத்-தலில் தொடர்ந்து ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை குண்டர் சட்டத்தில்
அடைக்க, தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்-புலனாய்வு துறை பரிந்துரை படி, தர்மபுரி
மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் உள்ள
மூவரிடமும், அதற்கான நகல், நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.