/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 23, 2025 01:22 AM
அரூர்:அரூரில், தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சுகதேவ் தலைமை வகித்தார். இதில் விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு, 40 சதவீதம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில், தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்குதல், ஐ.ஏ.எஸ்., தலைமையில் ஊதியக்குழு அமைத்து, 9வது மாநில ஊதிய மாற்றக் குழுவுடன் சேர்க்கப்பட வேண்டும். ஏற்கனவே நிலுவையிலுள்ள, 30 அம்சக் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

