/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விபத்தில் பூசாரி சாவு உறவினர்கள் மறியல்
/
விபத்தில் பூசாரி சாவு உறவினர்கள் மறியல்
ADDED : ஜன 04, 2025 01:37 AM
அரூர், ஜன. 4-
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தண்டகுப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 42, கோவில் பூசாரி, இவர் நேற்று காலை, 6:00 மணிக்கு, எச்.ஈச்சம்பாடி பஸ் நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார். அரூர் போலீசார் வெங்கடேசனின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவ
மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் வெங்கடேசன் மீது விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க கோரி, அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன், தர்மபுரி சாலையில் மதியம், 1:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அரூர் எஸ்.ஐ., உதயகுமார், விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.