sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கொலை வழக்கில் கைதான மத போதகருக்கு 14 ஆண்டு சிறை

/

கொலை வழக்கில் கைதான மத போதகருக்கு 14 ஆண்டு சிறை

கொலை வழக்கில் கைதான மத போதகருக்கு 14 ஆண்டு சிறை

கொலை வழக்கில் கைதான மத போதகருக்கு 14 ஆண்டு சிறை


ADDED : மார் 29, 2025 07:25 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: கொலை வழக்கில் கைதான மத போதகருக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தர்மபுரி மாவட்டம், வர்ணதீர்த்தம் கிராமத்தை சேர்ந்த அற்பு-தராஜ், 43, அரூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் மத போதகராக பணி-புரிந்தார். இவருக்கும், அரூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்த கண்-ணகி, 50, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த, 2014 செப்.,4 -அன்று கண்ணகி வீட்டிற்கு சென்ற அற்பு-தராஜ், அவருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது, அற்புதராஜ் கண்ணகியை அடித்து, முகத்தில் தலையணையை வைத்து அழுத்-தியதில் கண்ணகி இறந்தார்.கண்ணகி குடும்பத்தார், அரூர் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை முடித்து, இறுதி அறிக்கை தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று, தர்மபுரி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில், அற்புதராஜூக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சிவஞானம் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us