sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : ஜன 29, 2025 07:11 AM

Google News

ADDED : ஜன 29, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் உள்ளது குந்தாரப்பள்ளி கூட்ரோடு பகுதி. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சந்தை நடப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக, குந்தாரப்பள்ளி பிரிவு சாலை முதல், சந்தை நடக்கும் இடம் வரை இருபுறமும் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இக்கடைகள் வைத்திருப்பவர்கள் சிலர், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தையும் ஆக்கிரமித்து விளம்பர பலகைகள், கூரை அமைப்பது போன்றவற்றால் அதிகளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலை துறையினருக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து நேற்று, குருபரப்பள்ளி போலீசார் பாதுகாப்புடன், நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் அன்புஎழில் தலைமையில், பொக்லைன் மூலம் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோரம் ஆக்கிரமிப்பதை கடைக்காரர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us