ADDED : ஜன 19, 2026 08:31 AM
பென்னாகரம்: பென்னாகரம் அருகே, குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளை அடர்ந்த வனப்பகு-திக்குள் விரட்ட, வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கர்நாடக மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்-செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப்ப-குதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான யானைகள் ஒகேனக்கல், தாசம்பட்டி, போடூர், சின்னாறு ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளன.
ஒகேனக்கல் வனப்பகுதியில் வறட்சி நிலவு-வதால் யானைகள், உணவு இல்லாமல் காடு-களில் இருந்து வெளியேறி வருவது வாடிக்கை-யாகி விட்டது. நேற்று முன்தினம் இரவு கே.குள்-ளாத்திரம்பட்டியில் விவசாய நிலத்தில் காவலில் இருந்த விவசாயியை மிதித்து கொன்றது. தொடர்ந்து கூத்தப்பாடி, மடம் உள்ளிட்ட சுற்று-வட்டார பகுதிகளில் சுற்றித்திரிந்தது.
எனவே, வனத்துறையினர் காடுகளை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தி, உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழையாமல் தடுத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

