ADDED : ஏப் 13, 2026 03:59 AM
அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பெரியப்பட்டி பஞ்.,ல், மந்-திகுளாம்பட்டி, ரங்கன்வலசு, பெரியப்பட்டி, கல்தானிப்பாடி உள்-ளிட்ட, 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்க-ளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே, அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், அரூர், தர்மபுரி உள்ளிட்ட வெளியிடங்களுக்கு செல்லும் பொதுமக்கள், கூலித்தொழிலா-ளர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்-றனர். மேலும், பஸ்சுக்காக, 5 கி.மீ., துாரத்தில் உள்ள நரிப்பள்-ளிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. எனவே, இக்கிரா-மங்களுக்கு கூடுதலாக, அரசு பஸ்களை இயக்க, மாவட்ட நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.
