sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காட்டு பன்றிகளை விரட்ட வனத்துறைக்கு கோரிக்கை

/

காட்டு பன்றிகளை விரட்ட வனத்துறைக்கு கோரிக்கை

காட்டு பன்றிகளை விரட்ட வனத்துறைக்கு கோரிக்கை

காட்டு பன்றிகளை விரட்ட வனத்துறைக்கு கோரிக்கை


ADDED : டிச 01, 2024 01:48 AM

Google News

ADDED : டிச 01, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டு பன்றிகளை விரட்ட

வனத்துறைக்கு கோரிக்கை

பாலக்கோடு, டிச. 1-

பாலக்கோடு அருகே, விவசாய பயிர்களை நாசம் செய்யும், காட்டு பன்றிகளை -விரட்ட, வனத்துறையினருக்கு விவசாயிகள்- கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவில் உள்ள சென்னப்பன் கொட்டாய், பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், திருமல்வாடி உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளன. இதில், விவசாயிகள் கரும்பு, நிலக்கடலை, வாழை, கேழ்வரகு, சோளம், தக்காளி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் யானை, காட்டு பன்றி, சிறுத்தை, மயில் உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இதில், வன விலங்குகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்தக்கோரி, விவசாயிகள் வனத்துறையினரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், பாலக்கோடு அடுத்த சென்னப்பன் கொட்டாயை சேர்ந்த, முனியப்பன் என்ற விவசாயி அவருடைய விவசாய நிலத்தில், 2 ஏக்கர் பரப்பில் நாட்டுசோளம் மற்றும் தக்காளி பயிரிட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு, 30க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் நாட்டு சோளப்பயிர்களை மிதித்து நாசம் செய்தன. விவசாய பயிர்களை பாதுகாக்க, காட்டு பன்றிகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு, உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us