sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

100 நாள் வேலை திட்ட பணிக்கு குறைந்த கூலியால் சாலை மறியல்

/

100 நாள் வேலை திட்ட பணிக்கு குறைந்த கூலியால் சாலை மறியல்

100 நாள் வேலை திட்ட பணிக்கு குறைந்த கூலியால் சாலை மறியல்

100 நாள் வேலை திட்ட பணிக்கு குறைந்த கூலியால் சாலை மறியல்


ADDED : மார் 04, 2026 08:49 AM

Google News

ADDED : மார் 04, 2026 08:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி:சுண்டகாப்பட்டியில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு மிக குறைந்த அளவிலான கூலி கொடுத்ததால், 50க்கும் மேற்-பட்டோர் சாலை மறியலுக்கு முயன்றனர்.

காவேரிப்பட்டணம் ஒன்றியம், ஆவத்துவாடி பஞ்., சுண்டகாப்-பட்டியில், 100 நாள் வேலை திட்டத்தில், பஸ் ஸ்டாப்பிலிருந்து ஜீவா வீடு வரை, 8.25 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ராம் வீடு முதல் மாதேஷ் வீடு வரை 5.55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டது. இப்பணிக்கு சுண்டகாப்-பட்டி கிராமத்திலுள்ள, 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கான கூலி வழங்கப்

படாமல் இருந்தது.

இதனால் நேற்று காலை பணி ஒப்பந்ததாரரிடம் பேசி கூலித்-தொகையை பெற்ற, சுண்டகாப்பட்டி, தி.மு.க., கிளைச்செய-லாளர் மூர்த்தி, 100 நாள் வேலை திட்ட பணியாளர் ஒருவருக்கு, நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் என கணக்கிட்டு, 6 நாட்களுக்கு, 300 ரூபாய் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், இது ஏமாற்று வேலை எனக்கூறி மறியலுக்கு முயற்சித்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி, காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., செந்திலை வரவழைத்தனர்.

அவர் பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் கடத்தியதால் ஆத்திர-மடைந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள், காவேரிப்பட்டணம்- - அகரம் செல்லும் சாலையில், சுண்டகாப்பட்டி பஸ் ஸ்டாப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுண்டகாப்பட்டியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், 'ஆவத்து-வாடி பஞ்.,ல், சுண்டகாப்பட்டி கிராமத்தில் வருடத்திற்கு, 6 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளனர். ஆவத்துவாடி கிரா-மத்தில் ஒவ்வொரு பணியாளரும், 100 நாள் கடந்து பணி செய்து வருகின்றனர். எங்களுக்கு தொடர்ந்து வருடத்திற்கு, 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும்'

என்றனர்.






      Dinamalar
      Follow us