/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'220 மாணவர்களுக்கு ரூ.14 கோடி கல்விக்கடன்'
/
'220 மாணவர்களுக்கு ரூ.14 கோடி கல்விக்கடன்'
ADDED : ஆக 23, 2024 04:47 AM
தர்மபுரி: ''தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு வங்கிகள் மூலம் இதுவரை, 220 மாணவர்களுக்கு, 14 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்-பட்டுள்ளது,'' என, மாவட்ட கலெக்டர் சாந்தி பேசினார்.
தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளி அருகே உள்ள தனியார் கல்லுா-ரியில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சாந்தி பேசியதாவது: கல்வி வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு அடிப்படை. தர்மபுரி மாவட்டத்தில் கடந்தாண்டில், 1,009 மாணவர்களுக்கு, 23 கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்-கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 1,568 மாணவர்களுக்கு, 22.44 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஏப்., மாதம் முதல் ஜூன் மாத இறுதி வரை, 121 மாணவர்க-ளுக்கு, 6.23 கோடி ரூபாயும், ஜூலை மாதத்தில், 77 பேருக்கு, 5.11 கோடி ரூபாயும் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், 22 மாணவர்களுக்கு, 2.67 கோடி ரூபாய் கல்விக்-கடன் வழங்கப்பட்டதுள்ளது. அதன்படி, மாவட்டம் முழுவதும் இதுவரை, 220 மாணவர்களுக்கு, 14 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி மற்றும் பல்-வேறு வங்கியாளர்கள், கல்விக்கடன் பெறுவது குறித்து மாணவர்-களுக்கு ஆலோசனை வழங்கினர்.