ADDED : மார் 26, 2026 02:19 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி நிலையான கண்கா-ணிப்பு குழு ராஜசேகர் தலைமையிலான பறக்கும் படையினர் பொம்மிடி - ராமமூர்த்தி நகர் செல்லும் சாலையில் வேப்பாடி ஆறு பாலம் பகுதியில் நேற்று மதியம், 12:15 மணியளவில் வாக-னச்சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சுங்கரஹள்ளியில் இருந்து, சேலம் மாவட்டம் மோரூருக்கு சென்ற பல்சர் பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். பைக்கில் ரேகடஹள்-ளியை சேர்ந்த வெங்கடேஷ், 30 என்பவர், உரிய ஆவணமின்றி, 1.49 லட்சம் ரூபாயை எடுத்து சென்றது தெரியவந்தது. இதை-யடுத்து பணத்தை பறிமுதல் செய்தனர். பின் பாப்பிரெட்டிப்-பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்திலிடம் ஒப்படைத்தனர்
