தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 03, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பறக்கும் படை குழு, நித்யா தலைமையிலான குழுவினர் செம்மனள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று மாலை, 6:45 மணியளவில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆர்.கோபிநாதம்பட்டியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த ஹூண்டாய் வெர்னா காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் வந்த தர்மபுரி பிடமனேரியை சேர்ந்த ரொமேஷ்சந்திரா, 45, உரிய ஆவணமின்றி, 2 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். இதனால் அப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்திலிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us