ADDED : ஏப் 01, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பறக்கும் படை குழு, நித்யா தலைமையிலான குழுவினர் சோளக்கொட்டாய் பகுதியில் நேற்று மாலை, 4:15 மணியளவில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது மொரப்பூரிலிருந்து தர்மபுரி நோக்கி வந்த ஹூண்டாய் ஐ20 ஸ்போர்ட்ஸ் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த மொரப்பூர் அடுத்த போளையம்பள்ளியை சேர்ந்த பிரபு, 39, உரிய ஆவணமின்றி, 2.50 லட்சம் ரூபாய் வைத்திருந்தார்.
இதனால் அப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்திலிடம்
ஒப்படைத்தனர்.
