ADDED : ஏப் 13, 2026 03:52 AM
அ நிறம் | அளவு
பென்னாகரம்: ஒகேனக்கல் அருகே, உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு சென்ற, 4 லட்ச ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி வனத்துறை சோத-னைச்சாவாடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சிவரஞ்சனி தலைமையிலான குழுவினர் நேற்று, வாகன தணிக்கையில் ஈடு-பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்-தபோது கர்நாடக மாநிலம், பனஸ்வாடியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் உரிய ஆவணங்களின்றி, 4 லட்ச ரூபாய் வைத்திருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் கோபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
