/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் ஆர்.டி.ஓ., ஆய்வு
/
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் ஆர்.டி.ஓ., ஆய்வு
ADDED : ஜன 04, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, ஜன. 4---
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, அலமேலுபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, இடத்தை தேர்வு செய்து அனுப்ப சுகாதார துறை அறிவுறுத்தியது. பின், அலமேலு புரம் பகுதியில் அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பையர்நத்தம் குறிஞ்சி நகர் பகுதியில், இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வழங்கிய மனுக்களை கொண்டு நேரடி ஆய்வு செய்தார். தாசில்தார் வள்ளி, தனி தாசில்தார் ஜெய் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

