/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.49.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
/
ரூ.49.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
ADDED : ஜூலை 02, 2024 07:15 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியா-ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
மொரப்பூர், அரூர், பாப்பி-ரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 185 விவசா-யிகள், 495 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டால், 6,969 முதல், 7,389 ரூபாய் வரை விற்ப-னையானது. மொத்தம், 495 குவிண்டால் பருத்தி, 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதி-காரிகள் தெரிவித்தனர்.அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது. இதில், 85 விவசாயிகள், 192 குவிண்டால் பருத்தியை விற்ப-னைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,862 முதல், 7,529 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 14.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.