/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோட்டப்பட்டியில் சேலம் டி.ஐ.ஜி., சாராய வேட்டை
/
கோட்டப்பட்டியில் சேலம் டி.ஐ.ஜி., சாராய வேட்டை
ADDED : பிப் 10, 2025 01:36 AM
அரூர்: தர்மபுரி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கோட்டப்பட்டி, ஏ.கே.தண்டா, சிட்லிங், நரிப்பள்ளி, தீர்த்தமலை உள்ளிட்ட கிராமங்களுக்கு, கடந்த காலங்களில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரப்பட்டு, பாக்கெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்பட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பவர்கள் மீது, கோட்டப்பட்டி போலீசார், கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் கள்ளச்சாராயம் முழுமையாக ஒழிக்கப்படவில்லை.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டி அடுத்த சிட்லிங், வேலனுார், ஏகே.தண்டா, எஸ்.தாதம்பட்டி உள்ளிட்ட இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பணியில், சேலம் டி.ஐ.ஜி., உமா தலைமையில், தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன் மற்றும் போலீசார், நேற்று காலை, 7:00 முதல், பகல், 12:00 மணி வரை தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.