/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோடை வெயிலால் நுங்கு விற்பனை ஜோர்
/
கோடை வெயிலால் நுங்கு விற்பனை ஜோர்
ADDED : ஏப் 27, 2024 06:54 AM
பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி மாவட்டத்தில் கடந்த பிப்., மாதம் முதலே கோடையின் தாக்கம் அதிகரித்ததால், மக்கள் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் சூட்டை தணிக்கும் பழங்கள், பழச்சாறு குடித்து வருகின்றனர். இதில் பனை நுங்கும் முக்கியமானது.
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது தினமும், 100 முதல், 106 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. உடல் குளிர்ச்சியை பராமரிக்க, பனை நுங்குக்கு அதிக பங்குள்ளது. இதனால் பனை நுங்கு சாப்பிட விற்கும் இடங்களை தேடி செல்கின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெனசி, பூதநத்தம், சேலம் மாவட்டம் ஓமலுார், மோரூர், மேச்சேரி, மேட்டூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு பனை நுங்கு பொம்மிடி, கடத்துார் பகுதியிலும் பாப்பிரெட்டிப்பட்டி, பஸ் ஸ்டாண்ட், வன அலுவலகம் முன்புறம், பொம்மிடி ரோடு பெட்ரோல் பங்க் பகுதிகளில் நுங்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நுங்கு, 10 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

