sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

துாய்மை பணியாளர்கள் குடியிருப்பு: ஆணைய தலைவர் நேரில் ஆய்வு

/

துாய்மை பணியாளர்கள் குடியிருப்பு: ஆணைய தலைவர் நேரில் ஆய்வு

துாய்மை பணியாளர்கள் குடியிருப்பு: ஆணைய தலைவர் நேரில் ஆய்வு

துாய்மை பணியாளர்கள் குடியிருப்பு: ஆணைய தலைவர் நேரில் ஆய்வு


ADDED : ஜூலை 05, 2024 12:13 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி, நகராட்சிக்கு உட்பட்ட குமாரசாமிப்பேட்டையிலுள்ள துாய்மை பணியாளர்கள் குடியிருப்பை, தேசிய துாய்மை பணி-யாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார்.அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தர்மபுரி நகராட்சியில், துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம், நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகி-றதா என்பதையும், ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, ஊதியம் முழுமையாக சென்றடைகிறதா என்பதையும் அலுவ-லர்கள் உறுதி செய்ய வேண்டும்.

துாய்மை பணியாளர்கள், பணி-களில் தொடர்ந்து ஈடுபடுவதால் தான் நாடும், நகரமும் சுத்தமா-கவும், சுகாதாரமாகவும் இருக்கிறது என்பதை, நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். துாய்மை பணியாளர்கள் மீது, துறை சார்ந்த அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி அவர்களின் கோரிக்கை-களை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். மேலும், அவர்-களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு தேவையான நடவடிக்கை-களை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒரு பணியாளருக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை, நகராட்சியில் பணிபு-ரிந்து ஓய்வு பெற்ற, 2 துாய்மை பணியாளர்களுக்கு தலா, 6.48 லட்சம் வீதம், 12.96 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்-கினார். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், ஆர்.டி.ஓ., காயத்ரி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us