/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடல்
/
நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடல்
ADDED : ஜூன் 07, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் : அரூரில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகம் மற்றும் சாலையோரத்தில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
இதில், அரூர் சார்பு நீதிபதி செல்வி அசீன், மாவட்ட உரிமையியல் நீதிபதி சசிகலா, குற்றவியல் நடுவர் நீதிபதி ராஜேஷ்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள், பணியாளர்கள், டவுன் பஞ்., பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.