ADDED : நவ 08, 2025 03:56 AM
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்துள்ள
செங்கனுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
பள்ளி
மேலாண்மை குழு தலைவி கங்கா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பழனி, பள்ளி
மேலாண்மை குழு மேற்-கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசியதாவது; 8 முதல் 14
வயதுள்ள குழந்தைகளுக்கு, ஆதார் புதுப்பித்தலுக்கான சேவை கட்டணம் நவ., 1
முதல் ஓராண்டு காலத்திற்கு
இல்லை.
திறன் திட்டத்தின் மூலம் தமிழ்,
ஆங்கிலம், கணிதம் எளிமை-யாக கற்றுக்கொள்வது, இல்லம் தேடி கல்வி, புதிய பாரத
எழுத்த-றிவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளிகளில்
செயல்ப-டுத்தப்பட்டு வரும் மன்ற செயல்பாடுகள், வடகிழக்கு பருவம-ழையின்போது
மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவ-டிக்கை, சுற்றுப்புற சுத்தம்,
டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்பு-ணர்வு உள்ளிட்டவை பற்றி கலந்துரையாடல்
நடைபெற்றது.
இவ்வாறு பேசினார்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

