/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கல்
/
செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கல்
செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கல்
செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கல்
ADDED : அக் 13, 2025 02:11 AM
தர்மபுரி: அதியமான்கோட்டை, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்-ளியில், படிப்போடு சிலம்பம், தேக்வாண்டோ, கராத்தே முதலிய தற்காப்பு கலைகள் மற்றும் ஓவியம், நடனம், சதுரங்கம் போன்ற உடலையும், மனதையும் ஊக்குவிக்கும் கலைகளும் கற்றுக் தரப்ப-டுகின்றன.
அதை கற்று தங்கள் இலக்குகளை நோக்கி பய-ணிக்கும், மாணவரை சிறப்பிக்க, 'பரிவர்த்தனம்' என்னும் கலை நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி தலைமை வகித்தனர். செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் கந்தசாமி, நல்ல சமூகம் உருவாக, நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும், அவர்களுக்குக் கல்வியுடன் கூடிய நன்ன-டத்தையையும் கற்றுத்தர அறிவுறுத்தினார். தர்மபுரி மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவை சேர்ந்த, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சூர்யா, மாணவர்-களிடம், தனிமனித ஒழுக்கத்தை ஒவ்வொரு மாணவரும் பின்-பற்ற வேண்டும் என்பதையும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் படி நடந்து எதிர்
காலத்தில் சிறப்பு மிக்க பணிகளில் பணியாற்ற, ஊக்கப்படுத்தி பேசினார்.
விழாவில் செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்-வாக அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் சிவராமகிருஷ்ணன், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள்,
ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்-டனர்.