sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கால்வாய்கள் துார்வாரப்படாததால் குட்டையான தும்பலஹள்ளி அணை

/

கால்வாய்கள் துார்வாரப்படாததால் குட்டையான தும்பலஹள்ளி அணை

கால்வாய்கள் துார்வாரப்படாததால் குட்டையான தும்பலஹள்ளி அணை

கால்வாய்கள் துார்வாரப்படாததால் குட்டையான தும்பலஹள்ளி அணை


ADDED : டிச 19, 2024 01:01 AM

Google News

ADDED : டிச 19, 2024 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள தும்பலஹள்ளி அணை, 45 அடி உயரம், 131 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. சின்னார் அணையிலிருந்து வரும் நீரால், ஏழு ஏரிகள் நிரம்பிய பின், தும்பலஹள்ளி அணைக்கு தண்ணீர் செல்கிறது.

சின்னாற்றிலிருந்து, செங்கன் பசுவன்தலாவ் ஏரிக்கு செல்லும் ஜெர்தலாவ் கால்வாய், 420 கன அடியாக உள்ளதை, 1,000 கன அடி கொள்ளளவு கொண்டதாக மாற்றினால், மழைக்காலத்தில் வீணாக ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு செல்லும் உபரி நீரை, முழுமையாக ஏரிகளில் நிரப்ப முடியும்.

மேலும், சின்னாற்றில், சாமனுார் மற்றும் தொல்லேகாது ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டினால், கூடுதல் நீரை சேமித்து, ஏரிகளில் நிரப்ப முடியும்.

ஆனால், கால்வாய்கள் துார்வாராமல் பராமரிப்பின்றி உள்ளதால், பஞ்சப்பள்ளியிலுள்ள சின்னார் அணை நிரம்பியும் ஏரிகள் மற்றும் தும்பலஹள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

மாநிலம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், தும்பலஹள்ளி அணை மட்டும் அறவே நீரின்றி காணப்படுகிறது.

கடந்த, 7ம் தேதியன்று சின்னார் அணை நிரம்பி வினாடிக்கு, 140 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று, 12வது நாளாக, 90 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும், அதை நீராதாரமாக கொண்ட தும்பலஹள்ளி அணை, நீரின்றி குட்டையாகவே உள்ளது.

எனவே, கால்வாயை துார்வாரி, பாசனத்திற்கு மற்றும் குடிநீர் தேவைக்கு சின்னார் அணையிலிருந்து, கூடுதலாக தண்ணீர் திறந்து, தும்பலஹள்ளி அணைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us