/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எஸ்.பி., ஆபீசில் குறைதீர் முகாம்
/
எஸ்.பி., ஆபீசில் குறைதீர் முகாம்
ADDED : ஆக 29, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மற்றும் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர் முகாம் நடந்தது.
தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் முகாம் நடக்கிறது. நேற்று, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் தலைமையில் நடந்த முகாமில் பெறப்பட்ட, 78 மனுக்களில், 71 மனுக்களின் பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது. இதில், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.