sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

உடல்நலமின்றி எஸ்.எஸ்.ஐ., இறப்பு; அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

/

உடல்நலமின்றி எஸ்.எஸ்.ஐ., இறப்பு; அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

உடல்நலமின்றி எஸ்.எஸ்.ஐ., இறப்பு; அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

உடல்நலமின்றி எஸ்.எஸ்.ஐ., இறப்பு; அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்


ADDED : செப் 27, 2024 07:27 AM

Google News

ADDED : செப் 27, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், உடல்நலக்குறைவால் உயிரிழந்த, எஸ்.எஸ்.ஐ., உடல், 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் சாதிக், 56. இவர், கடத்துார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். கடந்த, 4 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். நேற்று காலை அவரது உடலுக்கு டி.எஸ்.பி.,க்கள் அரூர் ஜெகநாதன், தர்மபுரி டி.எஸ்.பி., ரமேஷ், இன்ஸ்பெக்டர்கள் சுகுமார், வான்மதி உள்ளிட்ட போலீசார், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மதியம் 1:00 மணியளவில், எஸ்.எஸ்.ஐ., சாதிக் உடல், வெங்கடசமுத்திரம் இஸ்லாமியர் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு, எஸ்.ஐ., சரவணன் தலைமையிலான போலீசார், 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன், உடல் அடக்கம் செய்யப்பட்டது. 1988 ல் பணியில் சேர்ந்த எஸ்.எஸ்.ஐ., சாதிக், 36 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இவருக்கு அப்ரோஸ் என்ற மனைவியும் யாசின், ஹசீடு, ஷாகுல் என, 3 மகன்களும் உள்ளனர்.






      Dinamalar
      Follow us