/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சரக கேரம் போட்டியில் சாதனை
/
ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சரக கேரம் போட்டியில் சாதனை
ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சரக கேரம் போட்டியில் சாதனை
ஸ்டான்லி பள்ளி மாணவர்கள் சரக கேரம் போட்டியில் சாதனை
ADDED : ஜூலை 25, 2025 01:10 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடந்து வரும் விளையாட்டு போட்டிகளில் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள், கேரம் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். வயது வரம்பு அடிப்படையில் நடந்த போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோர் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், கவிசரண் முதலிடம் பிடித்தார். ஆண்களுக்கான, 17 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் பகுத்தறிவாளன் முதலிடமும், 19 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் பிரிவில், ஆகாஷ் முதலிடமும் பிடித்துள்ளனர். பெண்களுக்கான, 19 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவில், தனுஷ்யா மற்றும் செங்கொடி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார் மற்றும் திவ்யா ஆகியோரை, பள்ளி தாளாளர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.மேலும், இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.