/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தரமற்ற கான்கிரீட் சாலை பணி தடுத்து நிறுத்தம்
/
தரமற்ற கான்கிரீட் சாலை பணி தடுத்து நிறுத்தம்
ADDED : பிப் 20, 2026 06:16 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே, அன்னசாகரத்தில் தரமற்ற முறையில் கான்கிரீட் சாலை பணிக்கு, பொது-மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை தடுத்து நிறுத்தினர்.
தர்மபுரி நகராட்சி அன்னசாகரம், 32 மற்றும், 33வது வார்டுக்கு உட்பட்ட அன்னசாகரத்தில் இருந்து, பாரதிபுரம் பகுதிக்கும் செல்லும் சாலை உள்ளது. இதில், தார்ச்சாலையாக இருந்ததை, பாதாள சாக்கடை பணிக்கு பின், கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், சாலையை முறையாக சமன் செய்யவில்லை. மேலும், கிராவல் மண் மீது தண்ணீர் தெளிக்கா-மலும், பெரிய அளவிலான ஜல்லி ஏதுமின்றி, கான்கிரீட் சாலை அமைப்பது தெரியவந்தது. இதனால், கோபமடைந்த அப்பகுதி மக்கள், தர-மற்ற முறையில் நடந்த சாலை பணியை தடுத்து நிறுத்தினர்.

