ADDED : நவ 25, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகிலுள்ள வி.மோட்-டூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் சங்கவி, 12. இவர், அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த, 13ல் மாணவி வென்னீர் சுட வைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் அவரது உடையில் தீப்பிடித்தது. இதில், படுகாய-மடைந்த மாணவியை, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்-தனர். அங்கு நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு மாணவி இறந்தார். சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.