/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உதவித்தொகையை உயர்த்தி வழங்க மா.திறனாளிகள் மறியல்
/
உதவித்தொகையை உயர்த்தி வழங்க மா.திறனாளிகள் மறியல்
ADDED : பிப் 11, 2026 07:09 AM
தர்மபுரி: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் மாதேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில், தமிழக அரசு வழங்கும், 2,000 ரூபாய் உதவித்தொகை போதுமானதாக இல்லை. அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவது போல், சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு, 6,000 ரூபாய், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 10,000 ரூபாய், படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, 15,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சேலம் - தர்மபுரி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 93 பெண்கள், 112 ஆண்கள் என, 205 மாற்றுத்திறனாளிகளை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

