sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்

/

டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்

டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்

டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்


ADDED : டிச 18, 2024 01:43 AM

Google News

ADDED : டிச 18, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, டிச. 18-

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில், தர்மபுரியில் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க மாநில சிறப்பு தலைவர் பாரதி தலைமை வகித்தார். மாநில தலைவர் முருகன், பொதுச்செயலாளர் குமார், பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

இதில், டாஸ்மாக் கடைகளில் கடந்த, 22 ஆண்டுகளாக பணி

புரிந்து வரும் விற்பனையாளர்கள் மற்றும் சூப்பர்வைசர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மது விற்பனை பணி நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும். இரவு, 10:00 மணி வரை விற்பனை செய்த தொகையை எடுத்து செல்ல வெகு நேரமாவதால், கொள்ளையர்களின் பயம் அதிகரித்து

வருகிறது.

விற்பனையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 22ல், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் தினகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us