ADDED : ஜூன் 03, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் :ஓசூர் அருகே புனுகன்தொட்டியை சேர்ந்தவர் சீனப்பா, 56. இவரது மனைவி வெங்கடலட்சுமி, 49. கடந்த, 30ம் தேதி காலை, 6:30 மணிக்கு, இருவரும் அப்பகுதியில் உள்ள நிலத்தில் வேலை செய்தனர்.
அங்கிருந்து வெளியே சென்ற வெங்கடலட்சுமி திரும்பி வரவில்லை. கணவர் புகார்படி, ஹட்கோ இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் விசாரிக்கிறார்.