/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
ADDED : அக் 28, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாரண்டஹள்ளி: மாரண்டஹள்ளி பகுதியில், புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு, 'சீல்' வைத்து, அபராதம் விதிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் மாரண்ட-ஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., முருகன் ஆகியோர் மாரண்-டஹள்ளி சுற்றுவட்டாரத்தில் சோதனை செய்தனர். அப்போது, கொண்டயனஹள்ளி பஞ்., உட்பட்ட பாறைகொட்டாயிலுள்ள பெட்டிக்கடையில், புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்-தது. அதை தொடர்ந்து கடைக்கு, 'சீல்' வைத்து, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.