sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கிருஷ்ணகிரி நகராட்சியில் நடந்த வார்டு சிறப்பு கூட்டம் 'வெறிச்'

/

கிருஷ்ணகிரி நகராட்சியில் நடந்த வார்டு சிறப்பு கூட்டம் 'வெறிச்'

கிருஷ்ணகிரி நகராட்சியில் நடந்த வார்டு சிறப்பு கூட்டம் 'வெறிச்'

கிருஷ்ணகிரி நகராட்சியில் நடந்த வார்டு சிறப்பு கூட்டம் 'வெறிச்'


ADDED : அக் 28, 2025 01:41 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சியில் நடந்த, வார்டு சிறப்பு கூட்டம் அதிகாரிகள், பொதுமக்கள் யாருமின்றி வெறிச்சோடியது.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 33 வார்டுகளுக்கும், குறைகளை கேட்டறியும் விதமாக சிறப்பு வார்டுகள் கூட்டம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரியில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில் பொதுமக்கள் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

கிருஷ்ணகிரி, 1வது வார்டில் வார்டு சிறப்பு முகாமை நகராட்சி கமிஷனர் சதீஷ்குமார் மற்றும் நகராட்சி தலைவர் பரிதா நவாப் மற்றும் அலுவலர்கள் துவக்கி வைத்தனர். இரண்டு, மூன்று வார்டுகளுக்கு ஓரிடத்தில் பந்தல், நாற்காலிகள் போடப்பட்டும், பொதுமக்கள் யாரும் வரவில்லை. பல இடங்களில் முகாம்களில், அதிகாரிகளே இல்லை.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'முகாம் நடப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. எங்களுக்கு, இது குறித்து எதுவுமே தெரியவில்லை' என்றனர்.

பெங்களூரு சாலையில், 7, 8வது வார்டுக்கு குறைகேட்கும் முகாம் அமைக்கப்பட்டது. இதில், அதிகாரிகள். பொதுமக்கள் யாரும் இல்லாத நிலையில், குரங்குகள் அங்கு போட்டிருந்த நாற்காலிகளை தள்ளிவிட்டும், பேனர், பந்தல்களை கிழித்தும் விளையாடின.






      Dinamalar
      Follow us